Division I : Aram (Righteousness)
Chapter 23 : புகழ் - FAME
Kural : 238
வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின்.
மு.வ உரை :
தமக்குப் பின் எஞ்சி நிற்பதாகியப் புகழைப் பெறாவிட்டால் உலகத்தார் எல்லார்க்கும் அத்தகைய வாழ்க்கை பழி என்று சொல்லுவர்.
கலைஞர் உரை :
தமக்குப் பிறகும் எஞ்சி நிற்கக் கூடிய புகழைப் பெறாவிட்டால், அது அந்த வாழ்க்கைக்கே வந்த பழியென்று வையம் கூறும்.
சாலமன் பாப்பையா உரை :
புகழ் என்னும் பெரும் செல்வத்தைப் பெறாது போனால், இந்த உலகத்தவர்க்கு அதுவே பழி என்று அறிந்தோர் கூறுவர்.
English Translation:
Vasaiyenpa Vaiyaththaark Kellaam Isaiyennum
Echcham Peraaa Vitin
Explanation:
Not to beget fame will be esteemed a disgrace by the wise in this world
Reproach will remain for those who, with no fame,
have no legacy to leave behind.
DT: 07 Dec 2016
No comments:
Post a Comment