Division I : Aram (Righteousness)
Chapter 23 : Charity
Kural : 228
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்.
மு.வ உரை :
தாம் சேர்த்து வைத்துள்ள பொருளைப் பிறருக்குக் கொடுக்காமல் வைத்திருந்து பின் இழந்து விடும் வன் கண்மை உடையவர் பிறர்க்கு கொடுத்து மகிழும் மகிழ்ச்சியை அறியாரோ.
கலைஞர் உரை :
ஏழை எளியோர்க்கு எதுவும் அளித்திடாமல் ஈட்டிய பொருள் அனைத்தையும் இழந்திடும் ஈ.வு இரக்கமற்றோர், பிறர்க்கு வழங்கி மகிழ்வதில் ஏற்படும் இன்பத்தை அறியமாட்டாரோ?.
சாலமன் பாப்பையா உரை :
இல்லாதவர்க்குக் கொடுப்பதால் கொடுப்பவரும் பெறுபவரும் முகத்தாலும் மனத்தாலும் மகிழ்ச்சி அடைவர். பிறர்க்குக் கொடுக்காமல் பொருளைச் சேமித்து வைத்துப் பிறகு அதை இழந்துவிடும் கொடியவர்கள் அம்மகிழ்சியை அறியார்களோ?.
English Translation:
Eeththuvakkum Inpam Ariyaarkol Thaamutaimai
Vaiththizhakkum Vanka Navar
Explanation:
Do the hard eyed who lay up and lose their possessions not know the happiness which springs from the pleasure of giving ?
Do they not know to enjoy the joy of giving, those loveless people,
who keep their wealth only to lose it.
DT: 27 Nov 2016