Division I : Aram (Righteousness)
Chapter 23 : Charity
Kural : 224
இன்னா திரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணு மளவு.
மு.வ உரை :
பொருள் வேண்டும் என்ற இரந்தவரின் மகிழ்ந்த முகத்தைக் காணும் வரைக்கும் (இரத்தலைப் போலவே ) இரந்து கேட்கப்படுவதும் துன்பமானது.
கலைஞர் உரை :
ஈதல் பண்புடையவர்க்குத் தம்மை நாடி வரும் இரவலரின் புன்னகை பூத்த முகத்தைக் கண்டு இன்புறும் வரையில், அவருக்காக இரக்கப்படுவதும் ஒரு துன்பமாகவே தோன்றும்.
சாலமன் பாப்பையா உரை :
கொடுக்க இருப்பவரின் நிலைகூட தம்மிடம் வந்து யாசித்து நிற்பவரின் மலர்ந்த முகத்தைக் காணும் வரை கொடியதே.
English Translation:
Innaadhu Irakkap Patudhal Irandhavar
Inmukang Kaanum Alavu
Explanation:
To see men begging from us in disagreeable until we see their pleasant countenance
To be asked to give is bitter too, until seeing
the smiling face of the recipient.
DT: 23 Nov 2016
No comments:
Post a Comment